Home Jaffna News சுவிஸ்லாந்தில் இருந்து வந்த கோவில் ஐயர் யாழில் நடாத்திய காம கூத்து வீடியோக்கள் வெளியாகின!!

சுவிஸ்லாந்தில் இருந்து வந்த கோவில் ஐயர் யாழில் நடாத்திய காம கூத்து வீடியோக்கள் வெளியாகின!!

யாழில் உள்ள பிரபல கோவில் ஒன்றில் ஐயப்ப பூசைகளில் கலந்து கொள்வதற்காக லண்டனிலிருந்து வந்த ஐயர் ஒருவரின் அஜால் குஜால் காட்சிகள் வட்சப் மற்றும் வைபர் குறுாப்புக்களில் உலா வருகின்றன.

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்டவரும் சுவிஸ்லாந்தில் உள்ள கோவில் ஒன்றின் உதவிப் பூசகராக இருக்கும் 51 வயதானவரின் பாலியல் காட்சிகளே வெளியாகியுள்ளன.

ஐயரின் தொலைபேசி இலக்கம் மற்றும் ஐயருடன் உறவில் இருக்கும் பெண்ணின் தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கியே குறித்த வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் இருந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்ட போது அந்த காட்சிகளில் இருக்கும் பெண் தனது மனைவி எனவும் யாழில் நாள் வாடகைக்கு விடும் வீடு ஒன்றை கடந்த ஐப்பசி மாதம் தான் வாடகைக்கு எடுத்து மனைவியுடன் தங்கியிருந்ததாகவும் அங்கு தங்கியிருந்த போதே குறித்த வீடியோக்காட்சிகளை ரவுடிகள் பதிவு செய்து தன்னை பணம் கேட்டு அச்சுறுத்தி வருவதாகவும் ஐயர் கதையளந்தார்.

ஐயருடன் காணப்பட்ட பெண்ணின் இலக்கம் என வீடியோவில் காணப்பட்ட இலக்கத்திற்கு தொடர்பு எடுத்த போது அந்த இலக்கத்தையுடைய சிம் போனில் இருந்து அகற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

பணம் கேட்டு அச்சுறுத்துபவர்களை பொலிசாரிடம் முறையிட்டு உடனடியாக கைது செய்யலாம்தானே என கேட்ட போது தான் சுவிஸ் செல்லவுள்ளதாகவும் இவ்வாறு முறையிட்டால் வழக்கு முடியும்வரை யாழ்ப்பாணத்தில் நிற்க வேண்டி வரும் எனவும் அத்துடன் வீடியோ தொடர்பாக தான் கவலைப்படவில்லை எனவும் ஐயர் தெரிவித்தார்.

இதே வேளை இந்த வீடியோ வெளியாகியமை தொடர்பாக ஏற்கனவே பொலிசாரிடம் சிலர் முறையிட்டு குறித்த ஐயரை பொலிசார் விசாரித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஐயருடன் இருக்கும் பெண் ஐயரின் மனைவி இல்லை என்றும் யாழில் உள்ள ஐயப்பன் கோவில் ஒன்றில் 43 வயதான குறித்த பெண் பக்தையாக இருப்பவர் எனவும் தெரியவருகின்றது.

ஐயருடன் நெருங்கமா இருந்த ஒருவரின் வீட்டில் வைத்தே குறித்த பெண்ணுடன் ஐயர் பாலியல் உறவில் இருந்துள்ளார் எனவும் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஐயரின் தொலைபேசியிலேயே அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது எனவும் இதன் பின்னர் எவ்வாறு வீடியோ கசிந்தது என்பதை அறிய முடியாதுள்ளதாகவும் ஐயர் அந்த விசாரணைகளில் ஒத்துழைக்காதபடியால் விசாரணைகளை முடித்துவிட்டதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

Previous articleஇன்றைய ராசிபலன் – 05/02/2023, துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleமுல்லையில் இரண்டு சிறுவர்களை மோட்டுதனமாக போட்டு தாக்கிய பொலிசார்