அநுராதபுரத்திற்கு யாத்திரையாக வந்த யுவதி உட்பட குழுவினர் திபுல்வெவ குளக்கரைக்கு அருகில் நீராடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, குறித்த யுவதி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகள் யுவதியை மீட்டு நெலுபேவ வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் குறித்த யுவதி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுக்க வடரெக்க பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிதோகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.